மட்டக்களப்பில் காணாமல் போன மீனவர்கள் – 3 நாட்களாக தீவிர தேடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு பிரதேசத்தில் இயந்திர படகில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன இவர்களை கடற்படையினர் தேடிவருவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (10.12.2023) கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய தங்கவேல் தங்கத்துரை, 56 வயதுடைய கந்தையா புண்ணியராசா ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கல்குமடு கடற்கரையில் இருந்து பைவர் இயந்திரப் படகில் கடலில் மீன்பிடிப்பதற்காக சென்றவர்கள் வீடு திரும்பாத நிலையில் அவர்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து கல்குடா பொலிஸார் கடற்படையின் உதவியுடன் இருவரையும் தேடிவருவதாகவும் காணாமல் போய் இன்று மூன்று தினங்களாகியும் அவர்கள் தொடர்பாக எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடற்படை மற்றும் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply