பெண்ணொருவர் கொலை – கழுத்தை வெட்டிக் கொண்டு கிணற்றுக்குள் குதித்த ஆண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வெலிவேரிய, வேபட பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கி வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் வௌிநாட்டிலிருந்து வந்த 32 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செயயப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன், சம்பவத்தில் அவரின் சகோதரி மற்றும் நண்பி ஆகியோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தாக்குதலை மேற்கொண்ட 37 வயதான சந்தேகநபர், அதே ஆயுதத்தால் தன்னுடைய கழுத்தின் பின்புறத்தை வெட்டிக்கொண்டு அருகிலிருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

இந்நிலையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்புடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply