டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் – பதிவிட்ட முதல் டுவீட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை வாங்குவதற்கு உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க முன் வந்தார்.

இதனையடுத்து, டுவிட்டரை எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு டுவிட்டர் நிறுவனம் சம்மதித்துள்ளது.

ஏற்கனவே டுவிட்டரின் 9% பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக தனது முதல் டுவீட்டை அவர் பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது:-

“எனது மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் அதுதான் பேச்சு சுதந்திரம்” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் பதிவிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், “சுதந்திரமான பேச்சு என்பது ‘செயல்பாட்டில் இருக்கும் ஜனநாயகத்தின் அடித்தளம்’ ஆகும்.

மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான முக்கியமான விஷயங்கள் டுவிட்டரில் விவாதிக்கப்படுகின்றன.

புதிய அம்சங்களுடன் டுவிட்டரை மேம்படுத்துவதன் மூலம், டுவிட்டரை முன்னெப்போதும் விட, சிறந்ததாக ஆக்க விரும்புகிறேன்.

டுவிட்டரில் வைரஸ் தாக்குதல்களை நிறுத்துவதன் மூலமும், எல்லா மனிதர்களையும் அங்கீகரிப்பதன் மூலமும், டுவிட்டரை சிறந்ததாக்க விரும்புகிறேன்.
டுவிட்டரில் ‘மிகப்பெரிய ஆற்றல்’ உள்ளது. அதனை வெளிக்கொண்டு வர, இந்த நிறுவனத்துடனும் அதன் பயனர்களின் சமூகத்துடனும் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply