மின்னல் தாக்கி மீன்பிடிக்கச் சென்ற மூன்று பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மிஹிந்தலை தம்மன்னாவ வாவியின் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (11) மாலை சுமார் ஏழு பேர் கொண்ட குழுவொன்று தம்மன்னாவ வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்த மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

44 மற்றும் 46 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தம்மன்னாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply