பேருந்தை மறித்து சாரதியை கடத்தி சென்ற கும்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கம்பளை பகுதியில் இன்று (24) காலை 46 வயதுடைய பேருந்து சாரதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவெலயிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை வான் ஒன்றில் வந்த சிலர் மறித்து சாரதியை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பேருந்து சாரதி வத்தேகம பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply