தேர்தல் தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தேர்தல் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து அண்மைய நாட்களில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடல்களில் ஒன்று பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் 2 தடவைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்தன பாராளுமன்றத்தின் நேரத்தை நீடிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தியது போல், ​​தற்போதைய அரசாங்கமும் செயற்பட முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத் தடைகள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மாற்று வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு 2 வாய்ப்புகள் இருப்பதாகவும், நாட்டில் தேசிய ரீதியில் முக்கியமான ஒரு பிரச்சினையை ஜனாதிபதி குறிப்பிட்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக் கோரலாம் என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற சட்டத்தின் மூலம் 3 இல் 2 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜூலை மாதம் வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.