வசூலில் சாதனை படைத்த புஷ்பா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

புஷ்பா திரைப்படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் உலகம் முழுக்க ரூ116 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் – ராஷ்மிகா மந்தான் நடிப்பில் , தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், வெளியான படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியானாலும் அனைத்து மாநிலங்களிலுமே ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறதாம். மேலும் புஷ்பா வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுக்க ரூ.47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தெலங்கானாவில் மட்டுமே ரூ.11 கோடி ரூபாய்க்கு மேலும், தமிழகத்தில் ரூ. 4 கோடி ரூபாய்யும் வசூல் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புஷ்பா திரைப்படம் உலளவில் வசூல் வாரிக் குவித்து வருகிறது. இத்திரைப்படம் வெளியான முதல் 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.116 கோடி வசூல் குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் Mythri Movie Makers தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply