தாயும் சேயும் வைத்தியசாலையில் உயிரிழந்த சோகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தாயும் சிசுவும் பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒன்று திங்கட்கிழமை (19) பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது.

எத்திமலை கும்புக்கேயா பிரதேசத்தைச் சே​ர்ந்த 28 வயதானவர் என்றும் இவர் தனது இரண்டாவது குழந்தையைப் பி​ரவசித்த போதே உயிரிழந்தள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பி​ரசவத்துக்காக சியம்பலாண்டுவ ஆரம்ப வைத்தியசாலையில் 18ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட பின்னர் மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிரசவித்து சிறிது நேரத்தின் பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் தீவிர சிகிச்சைப் ​பிரிவில் அனுமதிக்கப்பட்ட தாயும் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply