இருவேறு இடங்களில் குண்டுவெடிப்பு – 14 பேர் பலி, 37 பேர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்று மாலை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் 22 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் உள்ள மசார்-இ-ஷெரீப் நகரத்தில் பேருந்து ஒன்றினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

குறித்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த தாக்குதல்களை இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.