மதுபான விருந்து ஒன்றில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை அடுத்து நபர் ஒருவர் மற்றுமொருவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் எஹதுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிரிய, அம்போகம பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மதுபான விருந்து நடந்த வீட்டின் உரிமையாளர், வீட்டின் முன் வசிப்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply