பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய் – மூவரும் ஆபத்தான நிலையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் அருந்திய நிலையில் மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் கம்பஹா லொலுவாகொட பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மூவரும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் எட்டு வயது மகளும் ஐந்து வயது மகனும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக் குழந்தைகளின் தந்தை ஓடுபாசி தொழிலாளி என்பதுடன் குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.