பொல்பிட்டிய பிரதேசத்தில் கால்வாயை கடக்க முயன்ற பாட்டியும் பேத்தியும் நீரில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 60 வயதுடைய மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காணாமல் போன 05 வயது பேத்தியை தேடும் நடவடிக்கையை பிரதேசவாசிகள் மற்றும் பொல்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
லக்ஷபான பொல்பிட்டிய பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையுடன், ஹிட்டிகேகம பொகரவெவில பிரதேசத்தின் ஊடாக களனி ஆற்றில் நீர் பாயும் இந்த கால்வாயில் வெள்ள நீர் அதிகரித்துள்ளது.
முன்பள்ளிக்குச் சென்ற பேத்தியை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போதே இருவரும் இந்த விபத்திற்குள்ளாகியுள்ளனர்.
பாட்டியின் சடலம் கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Follow on social media