மாடியிலிருந்து விழுந்து 15 வயது மாணவி படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றின் 15 வயது மாணவி ஒருவர் நேற்று (9) பாடசாலை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் குறித்த மாணவி, கட்டிடமொன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி ஒரு மாணவர் தலைவர் எனவும், கட்டுகஸ்தோட்டை – களுகமுவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிய CT ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அதன் பின்னர் மேலதிக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply