நண்பர்களுடன் விருந்துபசாரம் – சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நண்பர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திருகோணமலை – போதீஸ்புர என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை மகமாயபுர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆர்.பி.பிரதீப் கெலும் (வயது-34) எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் நேற்றைய தினம் நண்பர்களுடன் விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டதாகவும், பின்னர் நள்ளிரவு வேலையில் இவ்வாறு சடலமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.