தகாத உறவினால் ஏற்பட்ட மோதல் – 3 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தகாத உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏற்பட்ட வாள்வெட்டு காரணமாக மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (19) இரவு கிளிநொச்சி இராமநாதபுரம், கல்மடு பகுதியில் இடம்பெற்றுள்ளது . படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 28, 30 மற்றும் 50 வயதுடைய மூன்று பெண்களுமே இவ்வாறு காயமடைந்துள்ள நிலையில்,

இவர்கள் பளை மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மற்றும் வட்டக்கச்சி பிரதேசத்தில் வசிக்கும் மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகாத உறவினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன்

இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.