கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கவிழ்ந்ததில் 17 பயணிகள் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வௌ்ளிக்கிழமை (20) வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளானதில் 17 பயணிகள் காயமடைந்துள்ளனர் என மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

எதி​ரே வந்த காருக்கு இடம்கொடுப்பதற்கு முயற்சித்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பஸ்ஸின் மீது மோதிய கார், அவ்விட்டத்தில் நிற்காமல் வேகமாக பயணித்துவிட்டது. விபத்தில் காயமடைந்த ஏழு பயணிகள் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையிலும், பத்து பயணிகள் புத்தல பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply