கருணாவின் நிகழ்வில் முன்னாள் போராளிகளிற்கு கடும் சோதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் (Vinayagamoorthi Muralidaran) அவர்கள் நேற்றைய தினம் (24-09-2022) தெரிவு செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு 25 கிலோ அரிசி பை வழங்கியுள்ளார்.

இதன் போது வருகைதந்த முன்னாள் போராளிகளை பொலிஸார் உடற் பரிசோதனை மற்றும் கைப் பைகளை பரிசோதனை செய்து உள்ளே அனுப்ப வழமையாக வெளியில் நின்று கண்காணிப்பில் ஈடுபடும் இராணுவ புலனாய்வாளர்கள் கதிரை போட்டு உட்கார்ந்து வருகைதந்த முன்னாள் போராளிகளின் விபரங்களை பதிவுசெய்து ஏற்பாடு செய்த மண்டபத்திற்குள் அனுப்ப சற்று நேரத்தில் வருகை தந்த கருணா அரிசிப் பையை வழங்கி வைத்துள்ளார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting