மக்காவிற்கு புனித யாத்திரை சென்ற இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதுடன், அவர் கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மற்றைய நபர் விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow on social media