இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பேலியகொட, கலுபாலம பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சிறையிலிருந்து திரும்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting