அறையில் இருந்த மர்ம நபர் – மனைவியை கொலை செய்த கணவன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

லங்காபுர பிரதேச செயலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவரது கணவரை பொலன்னறுவை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (04) அதிகாலை 2.45 மணி அளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலின் போது உயிரிழந்த நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும், அறையில் நபர் ஒருவரைக் கண்டதாகவும் ஆனால் இருள் காரணமாக அவரை அடையாளம் காண முடியவில்லை எனவும் உயிரிழந்த பெண்ணின் கணவன் முன்னர் தெரிவித்திருந்தார்.

யமுனா பத்மினி என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply