யுவதியை பலவந்தமாக கடத்தி சென்ற மர்ம கும்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஹொரண பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் இனந்தெரியாத கும்பல் புகுந்து யுவதி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஹோட்டல் ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத கும்பல், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பெண்ணொருவரை பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில், பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே கடத்தி சென்றுள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் ஊழியர்கள் பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, உடனடியாக செயற்பட்ட ஹொரணை பொலிஸ் அதிகாரிகள், கடத்தப்பட்ட பெண்ணை சுமார் 3 மணித்தியாலங்களில் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், கடத்தலை மேற்கொண்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பண்டாரகம, அங்குருவத்தோட்ட வீதியில் லெனவர உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply