பலத்த மழை காரணமாக பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அரநாயக்க – மாவனெல்லை பிரதான வீதியில் கப்பாகொடை பிரதேசத்தில் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மரம் விழுந்ததில் உயர் அழுத்த மின்கம்பியும் சேதமடைந்துள்ளது.
பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதால் மாவனெல்லையில் இருந்து அரநாயக்க நோக்கி பயணிக்கும் மக்கள் அனைவரும் வெலிகல்ல ஊடாக உஸ்ஸாபிட்டிய வீதியை பயன்படுத்துமாறு மாவனெல்லை பொலிஸார் அறிவித்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
Follow on social media