யாழில் பொலீஸ் சுற்றிவளைப்பு – கசிப்புடன் சிக்கிய பெண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அதியஸ்தகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலீஸ்ஸாருடன் இணைந்து ஊரெழு மேற்கு பகுதியில் சுற்றி வளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பின் போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 47 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 10 லிட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலீசார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply