எல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட கரதகொல்ல – ரக்கித்தாகந்த வீதியில் பயணித்த தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
இந்த விபத்தில் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இன்று காலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எல்ல காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
உமாஓயா வேலைத்திட்டத்திற்கு பணிக்காக சென்ற பணியாளர்களை மீள வீட்டிற்கு அழைத்து சென்ற பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பேருந்தின் சாரதியே உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Follow on social media