Skip to content
Ra Tamil
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • சர்வதேசம்
  • கல்வி
  • சினிமா
  • வர்த்தகம்
  • ஆரோக்கியம்
  • நம்மவர் படைப்புகள்
Menu

ஆசிரியைக்கு “ஒமிக்ரோன்” தொற்று – ஆசிரியர்கள் மாணவர்கள் தனிமைப்படுத்தலில்

Posted on January 3, 2022

பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்திருக்கின்றனர்.

மினுவாங்கொட – நில்பனாகொடி பகுதியில் உள்ள பாலர் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கே ஒமிக்ரோன் தொற்று உறுதியானது.

தற்போது குறித்த பாலர் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு கல்வி கற்ற 20 மாணவர்கள், ஆசிரியை உள்ளிட்டோர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான பாலர் பாடசாலை ஆசிரியைக்கு, சில தினங்களுக்கு முன்னர் கொரோனா நோய் அறிகுறிகள் இருந்தமையினால் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே அவருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாரிடமிருந்து இவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது இதுவரையில் உறுதியாகவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களுக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லை என்றும் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow on social media
  • Facebook
  • Facebook Group
  • Twitter
  • YouTube
  • WhatsApp
  • Telegram
  • Google News

RA TAMIL

©2025 Ra Tamil | Design: Newspaperly WordPress Theme