கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட 14 வயதுடைய சிறுமியொருவர் பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
லுணுகல சூரியகொட பகுதியைச் சேர்ந்த குறித்த காணாமல் போனதாக அவரது பெற்றோரால் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி லுணுகல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் பேலியகொட பகுதியில் தனது 22 வயது காதலனுடன் சிறுமி தங்கியிருந்த நிலையில் பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான காதலர்கள், நேற்று லுணுகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இருவரையும் பதுளை நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
Follow on social media