உனவடுன – யத்தெஹிமுல்ல பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் மசாஜ் நிலையமொன்றில் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த 38 வயதான அயர்லாந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தல் மற்றும் அதற்கு உதவியமை தொடர்பில் மசாஜ் மையத்தின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக ஊழியரும் கைது செய்யப்பட்டார், அதற்கு உதவியதற்காக உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.
அயர்லாந்து நாட்டுப் பெண் நேற்று (16) குறித்த இடத்திற்கு மசாஜ் செய்துகொள்வதற்காக சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media