ஈரானின் பெண்கள் தலைமையில் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஈரானின் இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஈரானின் அறநெறிக் காவல்துறை கலைக்கப்படுவதாக அந்த நாட்டின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

ஹிஜாப் ஆடையின் கடுமையான விதிகளை மீறியதாகக் கூறி 22 அகவைக்கொண்ட மஹ்சா அமினி என்ற பெண் அறநெறி காவல்துறையினரால் கடந்த செப்டம்பர் 16 அன்று கைது செய்யப்பட்டார்.

பின்னர் அந்தப் பெண் ஒருவர் காவலில் வைக்கப்பட்ட நிலையில் மரணமானார்.

இதனைக் கண்டித்து பல மாதங்களாக பெண்கள் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்தே நிலைமை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அறநெறிக் காவல்துறை கலைக்கப்படுவதாக ஈரானின் சட்டமா அதிபர் மொஹமட் ஜபார் மொன்மாசரி தெரிவித்துள்ளார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting