எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பண்டிகைக் காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும், நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள விநியோகத்தர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் நேற்று முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்திருப்பதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சந்தைக்கு எரிவாயு விநியோகிப்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவும் அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உரிய எரிவாயுக் கப்பல்கள் தற்போது நாட்டை வந்தடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply