தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தம் முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் திணைக்களங்களுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Follow on social media