குளியலறைக்குள் ரகசிய கேமரா – யாழ் போதனா மருத்துவரின் மோசமான செயல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழில் குளியலறைக்குள் இரகசிய கேமரா பூட்டி அங்கு குளிப்பவர்களை ரகசியமாக ரசித்து வந்த யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் குட்டு வெளியானதை அடுத்து மனைவியால் அடித்து துரத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மருத்துவரை உடனடியாக தனது வீட்டை வெளியேற்றிய அவரது மனைவி விவாகரத்து செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ் போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் தனது மனைவி மற்றும் மனைவியின் தாயார், மனைவியின் சகோதரி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனைவியின் சகோதரி மற்றும் தாய் ஆகியோரை வீட்டு குளியலறையில் இரகசிய கமரா பூட்டி நீண்ட காலமாக அவர்கள் குளிப்பதை கண்டு களித்துள்ளார்.

குளியலறையில் பூட்டப்பட்டிருந்த கண்ணாடியின் மேற் பகுதியில் குறித்த இரகசியக் கமரா பொருத்தப்பட்டுள்ளது. கைத் தொலைபேசியில் கண்காணிக்ககூடியதாக இணையத்துடன் இணைக்கப்பட்டதாக இருந்துள்ளது.

இந்நிலையில் குளியலறையில் ஏற்பட்ட நீர்குழாய் திருத்தம் ஒன்றிற்காக வரவழைக்கப்பட்ட ‘பிளம்பர்’ ஒருவரே இந்தக் கமரா அங்கு பொருத்தப்பட்டிருந்ததை வீட்டில் இருந்த மனைவியின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே அங்கு பிரளயம் உருவாகியது. அரச உத்தியோகத்தரான வைத்தியரின் மனைவிக்கு இவ்விடயம் அவரது தாயாரால் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. வைத்தியரின் மனைவி இது தொடர்பாக வைத்தியருக்கும் அறிவித்துள்ளார்.

உடனடியாக அங்கு வந்த வைத்தியர் அந்த கமராவைப் பொருத்தியது யார் என்பது தொடர்பாக திசை திருப்பும் செயற்பாட்டை நடாத்தியுள்ளார். அதோடு அங்கு வந்து ஓரிருநாள் தங்கியிருந்த மனைவியின் உறவுகள் மற்றும் சிலர் மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந் நிலையில் வீட்டுக்கு வந்த மனவைியின் சகோதரி கமராவை நீதான் பொருத்தியிருப்பாய் என சகோதரியின் கணவரான வைத்தியரைக் குற்றம் சுமத்தியதால் வைத்தியர் ஆத்திரமடைந்து மனைவியின் சகோதரியை தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

இதன்போது வைத்தியரின் தொலைபேசியை மனைவியின் சகோதரி பறித்துச் சென்று அயலவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து பாதுகாப்பு தேடியுள்ளார். அங்கு வந்து பெண்னை தாக்க முயன்ற போது அயல்வீட்டுக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துடன் பொலிசாருக்கு முறையிட முயன்றதால் அவர் அங்கிருந்து அகன்றுள்ளார்.

அதன் பின்னர் அங்கு வந்த மருத்துவரின் மனைவி அவரது தொலைபேசியின் கடவுச் சொல்லை கொடுத்து ஆராய்ந்த போது வைத்தியரின் குட்டு வெளிப்பட்டுள்ளது.

இதனையடுத்து மனைவி வைத்தியரை வீட்டிலிருந்து துரத்தியதுடன் விவாகரத்து பெறாவும் தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply