ஆசிரியைகள் தாக்கியதில் உயிரிழந்த மாணவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பாடசாலை ஒன்றில் இரண்டு ஆசிரியைகளால் தாக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டனர் எனக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

பிணையில் விடுவிக்கப்பட்ட ஆசிரியைகளும் மீண்டும் கைது

சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்று வந்த மேற்படி மாணவி, வகுப்பு ஆசிரியை மற்றும் மற்றுமொரு ஆசிரியையால் தாக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

வகுப்பறையை விட்டு வேறொரு மாணவியுடன் வெளியேறியதால் மாணவி தண்டிக்கப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்களான இரண்டு ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுக் கடந்த செப்டெம்பர் 13 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேற்படி மாணவி சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்ததையடுத்து, இரண்டு ஆசிரியைகளும் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting