கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து – சாரதி வைத்தியசாலையில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பதுளை பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (06) நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த லொறியொன்று ஹக்கல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்ததாகவும் சாரதி மாத்திரம் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான லொறி பிரதான வீதியை விட்டு விலகி வேகக்கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply