வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் – கண்டுகொள்ளாத அதிகாரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தற்பொழுது பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி – கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சுண்டிக்குளம் சந்தியூடாக கல்லாறு சுண்டிக்குளம் கடற்கரை செல்லும் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வெள்ளத்தால் வீதியால் முதியவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அதே பகுதியில் சிலரது வீட்டுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததன் காரணமாக அயலவர்கள் வீட்டில் தங்கி இருப்பதாகவும் இன்று காலை தொடக்கம் மாலை வரை உணவு தயாரிப்பதற்கு கூட முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

சிறுபிள்ளைகளை வைத்துக்கொண்டு பெரும் அவதியுறுவதாகவும் வெள்ளம் வழிந்து ஓட முடியாத நிலையில் காணப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக நேற்று (11-12-2023) காலை கிராம அலுவலர் அவர்களுக்கு விடயம் தொடர்பாக தெரிவித்திருந்தும் இன்று மாலை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் எமது பகுதிக்கு வந்து பார்வையிடவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply