3 விபச்சார விடுதிகளை நடத்திவந்த முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

3 விபச்சார விடுதிகளை நடத்திவந்த முன்னாள் இராணுவ கொமாண்டோ பிரிவு சிப்பாய் ஒருவர் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மாத்தளை சந்தி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

42 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 170 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.அநுராதபுரம் நகரில் இரகசியமாக 3 விபச்சார மற்றும் மசாச் நிலையங்களை நடத்திவரும் குறித்த நபர்,

அங்கு பணிபுரியும் பெண்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்காக அந்த இடங்களுக்கு வரும் ஆண்களை இலக்கு வைத்து இந்த ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting