இலங்கை கடற்பரப்பில் ஆபத்தான உயிரினம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தவகை பாறை மீன்கள் கடித்து பலர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பல செய்திகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஒட்டுண்ணியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜானக ரூபன் கூறுகையில்,

‘கோன்மஹா-ஸ்டோன் ஃபிஷ்’ ‘(Gonmaha-Stone Fish) என நச்சு மீன் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மீன்கள் இடிபாடுகள் நிறைந்த பாறை அடுக்குகள், ஆழமற்ற தடாகங்கள் மற்றும் குறைந்த அலைகள் உள்ள பகுதிகளில் காணப்படும்.

இந்த மீன்களின் மெதுவான இயக்கம் காரணமாக அவை சில நேரங்களில் பாசிகளால் மூடப்பட்டிருக்கும்.

இந்த மீன்கள் இனப்பெருக்க நோக்கத்திற்காக கரைக்கு அருகில் வரும் அதேநேரம் மீனின் முதுகில் உள்ள முதுகெலும்புகள் விஷம் கொண்டது.

இதனால் கடலில் குளிக்கும் போது செருப்பு அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply