ஹப்புத்தலை- ஹல்தும்முல்ல பகுதியில் மாடுகள் முட்டியதில் 5 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் இன்று காலை பாடசாலைக்கு செல்லும் வழியிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவர்கள், சிகிச்சைகளுக்காக ஹல்தும்முல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஹல்தும்முல்ல பகுதியில் உள்ள பாடசாலையின் மாணவர்களே காயமடைந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
Follow on social media