யாழ் நெல்லியடியில் வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்க முயன்ற வன்முறை கும்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.நெல்லியடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் கடைக்கு தீ வைக்க முயன்றபோது பொலிஸார் அங்கு வந்ததால் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. வாளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடையில் இருந்தவர்கள் மீதும், பொருட்கள் மீதும் பெற்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளனர்.

இதன்போது பொலிஸார் அங்கு வந்த நிலையில் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting