குருநாகல் பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த பிள்ளையொன்று காணாமல் போயுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிள்ளை மாதம்பே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையது என பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளை காணாமல் போனமை குறித்து சிறுவர் இல்லத்தின் பாதுகாவலர்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர்.
காணாமல் போன பிள்ளையை கண்டுபிடிக்க குருநாகல் தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Follow on social media