கைதான இந்திய மீனவர்கள் விடுதலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம் நேற்று (20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர், தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.

கைதான 8 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த மீனவர்கள் நேற்று (20) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் ‘ நிபந்தனையின் கீழ் அவர்களை விடுதலை செய்தார்.

இதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply