மர்ம நபரினால் பிரதேசசபை பெண் அதிகாரி குத்திக் கொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அறைக்குள் நுழைந்த மர்ம நபரினால் லங்காபுர பிரதேசசபை தலைமை நிர்வாக அதிகாரி குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

யமுனா பத்மினி என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த அந்த அதிகாரி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அறையில் நபர் ஒருவர் இருப்பதைக் கண்டதாகவும் ஆனால் இருள் காரணமாக அவரை அடையாளம் காண முடியவில்லை என்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting