தந்தை அடித்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட பாடசாலை மாணவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தந்தை அடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தலவாக்கலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

வட்டகொடை மேல் பிரிவில் வசித்து வந்த ஜீவராஜன் ரதிபிரியா என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தாய் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், தந்தையின் தாக்குதலால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting