மருதானை பகுதியில் கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கொழும்பு – மருதானையில் நேற்று (01.11.2023) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் கொழும்பு – பொரல்லை சிறுவர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமிக்கு கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Follow on social media