தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (14) தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துவது குறித்து தீர்மானிப்பதற்கு கல்வி அமைச்சினால் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவின் தீர்மானத்திற்கு இணங்க, சமூக ஊடகங்களில் கசிந்ததாக கருதப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கசியப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியர் எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.