கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெறுமதியான பொருட்களைக் கொண்டுச் சென்ற வர்த்தகர்கள் இருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு கோடி ரூபா பெறுமதியான மடிக்கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை வரி செலுத்தாமல் கொண்டு வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வர்த்தகர்களும் அனைத்து விமான நிலைய சோதனைகளையும் கடந்து இந்த பொருட்களை விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்லும் போது, ​​விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அங்கு வந்து கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரு வர்த்தகர்களும் தங்களது பைகளில் மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை மறைத்து வைக்காமல், விமான நிலைய சரக்குகளுக்கான வண்டிகளில் வைத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வெளியே வந்ததாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.