5 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி – கண்டால் அழையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கண்டி, கட்டுகஸ்தோட்டை வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரின் மனைவியிடம் இருந்து காணியைப் பெற்றுத் தருவதாகக் கூறி 5 கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் கண்டி விசேட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற 9 முறைப்பாடுகளுக்கு அயைம விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முத்துதந்திரிகெ ஜூட் பெர்னாண்டோ மற்றும் ஸ்ரீமதி திஸ்ஸ குமாரி ஆகிய சந்தேகநபர்களின் புகைப்படங்களை விசாரணைப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0718591045 அல்லது 0812222222 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting