மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன் – அதிர்ச்சி சம்பவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இந்தியாவின் பெங்களூருவில் குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கடித்து தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு கோனன குண்டே பகுதியை சேர்ந்தவர் விஜய்குமார் (45) – புஷ்பா (40) தம்பதியினருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் கடந்த நிலையில், 2 மகன்கள் உள்ளனர்.

அடிக்கடி தகராறு – பிரிந்து சென்ற மனைவி
இந்த நிலையில் 2வது மகன் பிறந்த சில ஆண்டுகளிலேயே தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த புஷ்பா, 2 மகன்களை அழைத்து கொண்டு கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 28ஆம் திகதி விஜயக்குமார், புஷ்பா வீட்டிற்கு தகராறில் ஈடுபட்டபோது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் ஆத்திரமடைந்த விஜயக்குமார், மனைவியின் இடது கை விரலை வாயால் கடித்து வாயிலேயே போட்டு மென்று தின்றதுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

வலியால் அலறி துடித்த புஷ்பாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை முடிந்த பிறகு, புஷ்பா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், விஜயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting