உத்தரவை மீறிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த சம்பவம் மன்னார் முழங்காவில் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
ரோந்துப் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டிய போதிலும் வாகனம் சிறுத்தாமல் பயணித்துள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Follow on social media