5 மொழிகளில் மாஸ் காட்ட வரும் சூர்யா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, 5 மொழிகளில் மாஸ் காட்ட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை 5 மொழிகளில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply