முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு – 2 பேர் பலி, 2 பேர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அவிசாவளை – தல்துவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த 4பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நால்வர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 27 மற்றும் 36 வயதுடைய தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 43 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு நேற்று (20) இரவு இடம்பெற்றதாக 119 க்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் அவிசாவளையில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் ரி 56 துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply